பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள் |
பூவிதழ் தேமல் நோய்: |
தாக்குதலின் அறிகுறிகள்:
- நோய்தாக்குதலானது , வாழையின் அடிப்பகுதி மற்றும் அதன் மையநரம்பு, இலைகளில் சுழல் வடிவ பிங்க் கலந்த சிவப்பு நிறமான கோடுகள் காணப்படுகிறது.
- மஞ்சரிக் காம்புகளிலும் கோடுகள் காணப்படும்.
- இலைகள்கொத்தாகவும் மற்றும்அரைபூர்த்தியுடைய நீள்மஞ்சரிக்காம்பு அதன் பண்புஅறிகுறிகளாகும்.
- வைரஸ்அசுவினி பூச்சி மூலம் பரவுகிறது. வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் மூலம் பரவுகிறது.
|
|
 |
|

|
|

|
|
அடிப்பகுதியில் சிவந்தக்கோடுகள் |
|
மஞ்சரிக்காம்பில் கோடுகள் |
|
இலையின் மையப்பகுதியில் அடர் நிறம் |
|
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறை:
- நோய் தாக்கிய கன்றுகளை உடனே அகற்றவேண்டும்.
- களைகளை நீக்கி வயலைச் சுத்தமாக வைக்கவும்.
- வயலில் எதுவும் பயிரிடப்படவில்லை எனினும் சுற்றியுள்ள களைகளில் நச்சுயிரிகள் தங்கியிருக்கும். ஆதலால் வயலைச் சுற்றிலும் எங்கும் களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
- இந்நோய் பாதிக்கப்பட்ட வாழைக் கன்றுகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து விடவேண்டும்.
இயந்திரவியல் முறை
- நோய் பரவுவதற்கு காரணமானஅசுவுணிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 1 மி.லி/லி அல்லது மெத்தில் டெமட்டான் 2 மி.லி/லி போன்ற மருந்துகளை தண்ணீர் மற்றும் ஒட்டுந் திரவத்துடன் கலந்து மரத்தின் மீது விசைத் தெளிப்பான் மூலமாகத் தெளிக்கவும்.
|
|
|